2012-07-27 16:27:09

கர்தினால்கள் குழுவுடன் திருத்தந்தை சந்திப்பு


ஜூலை,27,2012. வத்திக்கானிலிருந்து நம்பகத்தன்மைமிக்க ஆவணங்கள் பொதுவில் வெளியாகிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மூன்று கர்தினால்கள் அடங்கிய குழுவை இவ்வியாழனன்று திருத்தந்தை சந்தித்தார் என்று திருப்பீடம் கூறியது.
இக்குழுவின் கர்தினால்கள் Julian Herranz, Joseph Tomko, Salvatore de Giorgi, இன்னும், இக்குழுவின் செயலர் கப்புச்சின் சபை அருள்தந்தை Louis Martignani, இவ்விவகாரத்தை விசாரிக்கும் குற்றவியல் நடுவர் பேராசிரியர் Piero Antonio Bonnet, வத்திக்கான் நகர நீதிமன்றத்தின் நீதிஊக்குனர் பேராசிரியர் Nicola Picardi ஆகியோரும் சேர்ந்து திருத்தந்தையைச் சந்தித்தனர்.
இவ்விவகாரம் குறித்த இக்கர்தினால்கள் குழுவின் விசாரணைகளின் முடிவுகளையும், இன்னும் முடிக்கப்பட வேண்டிய குற்ற விசாரணைகள் குறித்தும் அறிந்து அக்குழுவுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இந்தக் குழு இந்தத் தனது வேலையை தளரா ஊக்கத்துடன் தொடர்ந்து செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரங்களுக்கான பதிலாளர் பேராயர் Angelo Becciu, திருத்தந்தையின் செயலர் பேரருட்திரு Georg Gänswein, வத்திக்கான் காவல்துறை அதிகாரி முனைவர் Domenico Giani, திருப்பீடச் செயலகத்திற்குத் தொடர்பு ஆலோசகர் முனைவர் Greg Burke ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.