Castel Gandolfoவுக்கு திருத்தந்தை வருகை தருவது மறைமாவட்டத்திற்கு மகிழ்ச்சி
மிகுந்த நாட்கள்
ஜூலை,26,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் கோடை விடுமுறை இல்லத்திற்கு ஒவ்வோர் ஆண்டும்
வருகை தரும்போது, Castel Gandolfo மறைமாவட்டத்திற்கு அது மகிழ்ச்சி மிகுந்த நாட்களாக
அமைகின்றன என்று அம்மறைமாவட்ட ஆயர் Marcello Semeraro கூறினார். ஒவ்வோர் ஆண்டும் Castel
Gandolfoவுக்கு திருத்தந்தை வருகை தருவது குடும்பத்தின் ஒரு முக்கியக் உறவினர் திரும்பி
வருவதைப் போல் மக்கள் உணர்கின்றனர் என்றும், இந்த நாட்களில் திருத்தந்தைக்காக எழுப்பப்படும்
செபங்கள் உச்சநிலையை அடைகின்றன என்றும் ஆயர் Semeraro கூறினார். இந்நாட்களில் திருத்தந்தை
வழங்கும் மூவேளை செப உரைகளில் உடலுக்குத் தரப்படும் ஒய்வு எவ்விதம் நமது உடலுக்கு மட்டுமல்லாமல்,
ஆன்மாவுக்கும் புத்துணர்ச்சி தருகிறது என்பதைத் திருத்தந்தை வலியுறுத்துகிறார் என்று
சுட்டிக்காட்டினார் ஆயர் Semeraro. நமது குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், இறைவனுடன்
நமது உறவை ஆழப்படுத்த நேரம் ஒதுக்கவும் நமது விடுமுறைகள் நம்மை அழைக்கின்றன என்று ஆயர்
Semeraro எடுத்துரைத்தார்.