2012-07-25 16:07:23

ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் உகாண்டா நாட்டு குழந்தைகளுக்கு நிதி திரட்டல்


ஜூலை,25,2012. இங்கிலாந்தில் பணியாற்றும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஒன்றும், பிரித்தானிய Rotary சங்கமும் இணைந்து இலண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது, உகாண்டா நாட்டு குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஒரு புதுமுறை திட்டத்தை வகுத்துள்ளன.
இவ்வமைப்புக்களைச் சேர்ந்த 129 தன்னார்வத் தொண்டர்கள் ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் குடியிருப்புக்களில் பணி செய்வதற்கு இசைந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் முழுவதும் உகாண்டா குழந்தைகள் நிதிக்கு அளிக்கப்படும்.
தன்னார்வத் தொண்டர்கள் 129 பெரும் இணைந்து 5500க்கும் அதிகமான மணி நேரங்கள் பணிகள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். இவர்களின் பணி நேரங்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ஏறத்தாழ 46,000 பவுண்டுகள், அதாவது 32 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது எத்தனையோ பிற வழிகளில் தங்கள் நேரத்தைச் செலவிட இளையோருக்கு வசதிகள் இருந்தும், இவர்கள் தங்கள் நேரத்தை உகாண்டாவின் குழந்தைகளுக்கு அளிக்க முன் வந்திருப்பது போற்றுதற்குரியது என்று இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் Kate Batterbury கூறினார்.








All the contents on this site are copyrighted ©.