கவிஞர் கண்ணதாசனின் தத்துவ எண்ணங்களைத் தாங்கி வரும் கவிதை
ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம்
பட்டாகும் - இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
உண்மையைச்
சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.... நிலை உயரும் போது பணிவு
கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் –
பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும்
உண்டாகும்
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.. அன்பு
நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்தஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்