2012-07-23 15:53:54

தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், நவீன அடிமைத்தனம் போல் உள்ளன


ஜூலை,23,2012. இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான சில சமூகங்களின் அடக்குமுறைகளை நோக்கும்போது, நவீன அடிமைத்தனம் இன்னும் நடைமுறையில் உள்ளது போல் தோன்றுவதாக கவலையை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஐக்கியநாட்டு கிறிஸ்தவ மறைபோதகர் ஒருவர்.
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியாக இருக்கும் தலித் இனத்தவர் அடக்குமுறைகளுக்கும் சித்ரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, அடிமைகளுக்கு இணையாக எவ்வித உரிமைகளும் வாய்ப்புகளும் இன்றி, விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்தார் கிறிஸ்தவ போதகர் Mathew Cork.
இந்தியாவில் 1கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர்கள் உட்பட 2கோடி பேர் மிகக் குறைந்த ஊதியத்துடன் கொத்தடிமைகள்போல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார் அவர்.
தலித் மக்களுக்குக் கல்வியை வழங்குவதன் மூலம், அம்மக்களின் விடுதலையையும் மாண்பையும் பெற்றுத்தர முடியும் என்பதை மனதிற்கொண்டு இந்தியாவில் பல கல்விக்கூடங்களை தலித் இன மக்களுக்கென கட்டித்தர திட்டமிட்டுச் செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார் Mathew Cork.








All the contents on this site are copyrighted ©.