ஆப்ரிக்காவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீர்வளம் நூற்றாண்டுகளுக்கு உதவும்
ஜூலை21,2012. ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த வறண்ட நாடாகிய நமிபியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
நீர்வளத்தை, அந்நாட்டில் தற்போது தண்ணீர் பயன்படுத்தப்படும் விகிதத்தில் பயன்படுத்தினால்
அடுத்த 400 ஆண்டுகளுக்கு அந்நாட்டுக்குப் போதுமான தண்ணீர் அங்கிருந்து கிடைக்கும் என்று
அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நீர்வளம் சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது,
ஆயினும், தற்போதைய பல நவீன நீர்வளங்களைவிட இது குடிப்பதற்குச் சுத்தமான நீரைக் கொண்டுள்ளது
என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். எனினும், அதிகாரப்பூர்வ அனுமதியின்றி அங்கிருந்து
தண்ணீர் எடுப்பது புதிய தண்ணீர் விநியோகத்தைப் பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அங்கோலா எல்லைப் பகுதியில் இந்த நீர்வளப் பகுதியில் வாழும் சுமார் 8 இலட்சம் மக்கள்
40 ஆண்டு பழமையுடைய கால்வாய்த் தண்ணீரையே சார்ந்து வாழ்கின்றனர்.