2012-07-20 15:59:59

புனித பத்தாம் பத்திநாதர் சகோதரத்துவ அமைப்பின் அறிக்கை குறித்த திருப்பீடத்தின் கருத்து


ஜூலை,20,2012. புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவ சகோதரத்துவ அமைப்பு, திருஅவை சட்டப்படி, திருப்பீடத்துடன் ஒன்று சேருவது குறித்த அந்த அமைப்பின் பொதுப்பேரவையின் அறிக்கை, முதலில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் கலந்தாய்வுக்கும் விவாதங்களுக்கும் விடப்பட்டுள்ள அறிக்கை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அருள்தந்தை லொம்பார்தி, “Ecclesia Dei” என்ற திருப்பீட அவையுடன் உரையாடல் நடத்துவதற்கு இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிப்பதற்காகத் திருப்பீடம் காத்திருக்கின்றது என்றும் கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தீர்மானங்களையடுத்து திருஅவையில் ஏற்பட்ட மாற்றங்களை ஏற்காமல் 1970ம் ஆண்டு ப்ரெஞ்ச் பேராயர் Marcel Lefebvre என்பவரால் இந்தப் புனித 10ம் பத்திநாதர் குருக்கள் சகோதரத்துவ அமைப்பு உருவாக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.