2012-07-20 15:51:37

இந்தியாவில் சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களை நிறுத்துவதற்கு டெல்லி உயர்மறைமாவட்டம் பெண் தலைவர்களுக்குப் பயிற்சி


ஜூலை,20,2012. இந்தியாவில் சிறார்க்கு எதிராக இடம் பெறும் உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் டெல்லி உயர்மறைமாவட்டம் பெண் தலைவர்களைத் தயாரித்து வருகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிறார்க்கெதிரான உரிமை மீறல்கள் குறித்து டெல்லி உயர்மறைமாவட்ட பெண் தலைவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதைத் தாங்கள் உணருவதாக, அவ்வுயர்மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி ஆணைய ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Ann Moyalan கூறினார்.
டெல்லி உயர்மறைமாவட்ட பெண்கள் ஆணையம் மற்றும் கத்தோலிக்கப் பெண்கள் அவையுடன் இணைந்து இவ்வாணையம் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
டெல்லியில் உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் சிறார்க்கு உதவுவதற்கென “1098” என்ற தொலைபேசி வசதியை டெல்லி அரசு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.