2012-07-19 16:29:21

நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் உருவாகியுள்ள வன்முறைகள் கவலையைத் தருகின்றன - பிலிப்பின்ஸ் ஆயர்


ஜூலை,19,2012. பிலிப்பின்ஸ் நாட்டின் Mindanao தீவில் நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் அண்மைய நாட்களில் உருவாகியுள்ள வன்முறைகள் கவலையைத் தருகின்றன என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
Mindanao தீவுப்பகுதியில் இஞ்ஞாயிறன்று புனித கிளாரட் துறவுச்சபையைச் சேர்ந்த இரு குருக்கள் தாக்கப்பட்டனர், மற்றும் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகள் குறித்து ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த Isabela மறைமாவட்ட ஆயர் Martin Jumoad, அண்மைய நிகழ்வுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகள் என்று கூறினார்.
கடந்த 61 ஆண்டுகளாக இப்பகுதியில் பணிகள் புரிந்து வரும் புனித கிளாரட் சபைத் துறவியர் இப்பிரச்சனையில் மக்களுக்கு தகுந்த நீதி கிடைக்கவேண்டும் என்று உழைத்து வருவதால், அவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளானர் என்று ஆசிய செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.