2012-07-19 16:17:54

கவிதைக் கனவுகள் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதை வரிகள்


"கண்ணுக் கினியன கண்டு - மனதைக்
காட்டில் அலைய விட்டு
பண்ணிடும் பூசையாலே - தோழி
பயனொன்றில்லையடி
உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
உள்ளேயும் காண்பாயடி."

"மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்
தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா."

பிறப்பினால் எவர்க்கும் -
உலகில் பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் -
நல்ல செய்கை வேண்டுமப்பா!








All the contents on this site are copyrighted ©.