உடற்பயிற்சியின்மையால் ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சம் மரணங்கள்
ஜூலை,19,2012. புகை பிடித்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக ஏற்படும் மரணங்களுக்கு இணையாக,
உடற்பயிற்சிக் குறைவும் உலகெங்கும் மக்களைக் கொல்கிறது என்று புதிய மருத்துவ ஆய்வொன்று
கூறுகிறது. மக்கள் வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள்
ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 இலட்சத்துக்கும்
மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று மருத்துவ இதழான "The Lancet"ல் வெளியான இந்த ஆய்வு
கூறுகிறது. இதய நோய், நீரழிவு நோய், சில வகை புற்றுநோய்கள் ஏற்படுவது ஆறு முதல் பத்து
வுழுக்காடு வரை குறையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. உடற்பயிற்சியின்மை என்ற இப்பிரச்சினை,
குறிப்பாக பிரிட்டனில் மிகவும் மோசமாகக் காணப்படுவதாகக் கூறும் ஆய்வாளர்கள், வயது வந்தோர்
பிரிவில், பிரிட்டனில், மூன்றில் இருவர் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சியை மேற்கொள்ளத்
தவறுகிறார்கள் என்று கூறுகின்றனர்.