2012-07-19 16:30:56

இரமதான் மாதம் நம் அனைவரையும் சிந்திக்க அழைக்கும் ஒரு மாதம் - கிறிஸ்தவ இஸ்லாம் மத நல்லிணக்க அமைப்பின் அழைப்பு


ஜூலை,19,2012. இஸ்லாமியர்கள் ஆரம்பிக்கும் இரமதான் மாதம் நம் அனைவரையும் சிந்திக்க அழைக்கும் ஒரு மாதம் என்று பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள 'Silsilah' என்ற கிறிஸ்தவ இஸ்லாம் மத நல்லிணக்க அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
ஜூலை 20 இவ்வெள்ளி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி முடிய இஸ்லாமியர் கடைபிடிக்கும் இரமதான் மாதத்தைக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இவ்வமைப்பினர், தியாகம், பாவங்களுக்குக் கழுவாய், இறைவனுடன் தொடர்பு ஆகிய அம்சங்களை இம்மாதம் அனைவருக்கும் கூறுகிறது என்று தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள Mindanao தீவில் PIME என்ற பாப்பிறைக் கழகத்தின் மறைபணியாளர்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய கிறிஸ்தவ இஸ்லாம் நல்லிணக்க அமைப்பு 'Silsilah' என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.