பாகிஸ்தானில் தலிபான்களின் அச்சுறுத்தலால் சுமார் 2 இலடசத்து 50 ஆயிரம் சிறார் போலியோ
தடுப்பூசிகளைப் பெற மாட்டார்கள்
ஜூலை 17,2012. பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில்
தலிபான் குழுக்களின் அச்சுறுத்தலால் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் சிறார் போலியோ தடுப்பூசிகளைப்
பெற மாட்டார்கள் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தாக்குதல்களுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலிபான் குழுக்கள் நலவாழ்வுத் திட்டங்கள் நடைபெறுவதற்குத்
தடங்கலாய் இருந்து வருகின்றன என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. உலகில் போலியோ நோய்ப்
பரவி வரும் மூன்று நாடுகளுள் பாகிஸ்தானும் ஒன்று. 2011ம் ஆண்டில் சுமார் 200 சிறார் போலியோவால்
தாக்கப்பட்டனர்.