2012-07-16 14:58:41

புதிய உடுப்பி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் Gerald Isaac Lobo


ஜூலை16,2012. இந்தியாவில் மங்களூர் மறைமாவட்டத்திலிருந்து உடுப்பி என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, அதன் முதல் ஆயராக, Shimoga ஆயர் Gerald Isaac Lobo அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Udupi, Kunapura, Karkala ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய உடுப்பி மறைமாவட்டத்தின் 14 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் ஒரு இலட்சத்து ஆறாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கத்தோலிக்கர். இங்குள்ள 46 பங்குகளில், 58 மறைமாவட்ட குருக்களும், 28 துறவறக் குருக்களும், 225 அருள்சகோதரிகளும் மறைப்பணியாற்றி வருகின்றனர். புதுமைகள் அன்னைமரி திருத்தலம் இப்புதிய மறைமாவட்டத்தின் பேராயலமாக மாற்றப்பட்டுள்ளது.
உடுப்பி மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள Shimoga ஆயர் Gerald Isaac Lobo, மங்களூர் மறைமாவட்டத்திலுள்ள Agrarல் 1949ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி பிறந்தவர். 1977ம் ஆண்டு மே 05ம் தேதி குருவான இவர், 2000மாம் ஆண்டு மே 20ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.