ஜூலை14,2012. “நீங்கள் உலகின் உப்பு.... நீங்கள் உலகின் ஒளி” என்ற தலைப்பில் Cameroon
நாட்டு Yaoundeல் திருப்பீட பொதுநிலையினர் அவை வருகிற செப்டம்பர் 4 முதல் 9 வரை மாநாடு
ஒன்றை நடத்தவுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் பொதுநிலை விசுவாசிகளுக்கென மாநாடுகளை
நடத்திவரும் இந்தத் திருப்பீட அவை, ஆப்ரிக்கக் கண்டத்தில் இவ்வாண்டில் நடத்தவுள்ளது.
2009ம் ஆண்டில் காமரூன் நாட்டுக்கும், 2011ம் ஆண்டில் பெனின் நாட்டுக்கும் திருத்தந்தை
திருப்பயணம் மேற்கொண்டதையொட்டி இந்த மாநாடு ஆப்ரிக்காவில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.