2012-07-12 12:49:36

கவிதைக்கனவுகள்....... சீன ஞானக்கவி தாவோ அவர்களின் கவிதை வரிகள்


நீ நம்பாவிட்டாலும் இந்த
பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளின்
ஒரு பகுதிதான் நீ

முரண்டு பிடித்தாலும்
பக்தி கொண்டாலும்
நீங்கள் இருவருமே
என் அங்கம் தான்
உங்களுக்கு பங்கம் வராது

பக்தி கொண்டால்
பரவசமாயிருப்பாய் நீ !
முரண்டு பிடித்தால்
துக்கவாசமாயிருப்பாய் நீ !

எப்படியிருந்தாலும்
நீங்களிருவருமே என் பிள்ளைகள்தாம் !!

களிமண்ணால் பானை செய்கிறோம்
பயன்படுத்துவதோ வெற்றிடத்தை.
கதவுகளும் ஜன்னல்களும் வைத்து
வீடு கட்டுகிறோம்
பயன்படுத்துவதோ
உள்ளே உள்ள வெற்றிடத்தை
எனவே
எது இல்லையோ அதை உபயோகி
எது இருக்கிறதோ
அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்.








All the contents on this site are copyrighted ©.