சிரியாவில் போரிட்டுவரும் 300 இளையோர் தங்கள் ஆயுதங்களைக் களைவதற்கு முன் வந்துள்ளனர்
ஜூலை,11,2012. சிரியாவின் Homs பகுதியில் போரிட்டுவரும் 300 இளையோர் தங்கள் ஆயுதங்களைக்
களைவதற்கு முன் வந்துள்ளனர் என்று Fides செய்தி கூறுகிறது. சிரியாவில் மக்கள் மத்தியிலிருந்து
இயல்பாகவே உருவான ஒப்புரவு என்ற பொருள்படும் "Mussalaha" என்ற அமைப்பின் தொடர்ந்த முயற்சியால்
அப்பகுதியில் ஆயுதம் தாங்கி போரிட்டு வரும் போராளிகள் அமைப்பைச் சேர்ந்த இளையோர் இவ்வமைப்பின்
ஆதரவுடன் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளனர். சிரியாவில் தொடர்ந்துவரும் போராலும்,
உயிர்ச் சேதங்களாலும், மக்கள் நம்பிக்கை இழந்து வருவதைக் கண்ட அருள்தந்தை Michel Naaman,
மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் தொடர்ந்த முயற்சிகளால் பொதுமக்களின் பிரதிநிதிகள்
அடங்கிய Mussalaha அமைப்பு உருவாக்கப்பட்டது. இராணுவத்துடன் மோதிவரும் போராளிகள் 1000
பேருக்கும் மேல் உள்ள Homs பகுதியில், Mussalaha அமைப்பின் முயற்சிகளால் உந்தப்பட்டு,
300 இளையோர் ஆயுதங்களைக் களைந்துவிட்டு, சிரியாவில் அமைதி நிலவ அரசியல் தீர்வுகளைத் தேடுவதற்கு
முன்வந்துள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.