அமராவதி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு Elias Gonsalves
ஜூலை11,2012. இந்தியாவின் அமராவதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, பேரருட்திரு Elias Gonsalves
அவர்களை இப்புதனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். Vasai மறைமாவட்டத்தின்
Chulneல் 1961ம் ஆண்டு பிறந்த இவர், 1983ம் ஆண்டு பம்பாய் உயர்மறைமாவட்டத்தின் Goregaon
புனித பயஸ் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1990ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டார். அமராவதி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள
பேரருட்திரு Elias Gonsalves, பம்பாய் உயர்மறைமாவட்டத்தில் பல முக்கிய பணிகளை ஆற்றியபின்,
2009ம் ஆண்டு முதல் பம்பாய் உயர்மறைமாவட்டத்தின் சமூகப்பணி மையத்தின் இயக்குனராக பணியாற்றி
வருகிறார். 1955ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமராவதி மறைமாவட்டத்தின் ஒரு கோடிக்கு மேற்பட்ட
மக்களில் 5,600க்கு அதிகமானோர் கத்தோலிக்கர். அமராவதியின் ஆயராகப் பணியாற்றிய ஆயர்
Daniel Lourdes, நாசிக் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து, அமராவதி மறைமாவட்டம்,
2010ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியிலிருந்து ஆயரின்றி இருந்தது.