வருங்காலத் தலைவர்களைத் தயார் செய்யும் இந்திய இளம் துறவியர் கூட்டம்
ஜூலை10,2012. “அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கான தலைமைத்துவம் 2012” என்ற தலைப்பில் இந்திய
துறவுசபை அதிபர்கள் அவையின் இளம் துறவியர் இத்திங்களன்று 4 நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளம்
துறவியருக்கென தேசிய அளவில் முதன்முறையாக நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட
சபைகளிலிருந்து 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 200க்கும் அதிகமான இளம் துறவியர் கலந்து
கொள்கின்றனர். துறவு வாழ்வின் எதிர்காலம் குறித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு இக்கூட்டத்தில்
ஒரு திட்டம் வகுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.