2012-07-10 15:53:51

தென் சூடான் அதிகாரிகள் ஊழலை ஒழித்து வாழுமாறு சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்


ஜூலை10,2012. தென் சூடான் அரசியல் அதிகாரிகளின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவரும் மனமாற்றத்திற்கு உறுதியளிக்குமாறு அந்நாட்டு கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென் சூடான் தனி நாடாகி ஜூலை 9ம் தேதியோடு ஓராண்டு ஆகியிருப்பதையொட்டி, தென் சூடான் தலைநகர் Juba பேராயர் Paulino Lukudu Loro வும் Episcopal கிறிஸ்தவ சபை பேராயர் Daniel Deng Bulவும் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில், ஊழல் மற்றும் இன வெறுப்பால் தென் சூடான் மிகுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சில சமூகங்களில் காணப்படும் ஊழல் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருக்கின்றது என்றும் கூறும் அவ்வறிக்கை, இனங்களுக்கிடையே பதட்டநிலைகள் காணப்படுவதும் கவலை தருகின்றது எனவும் கூறுகிறது.
தென் சூடான் தனி நாடாக உருவாகியிருப்பதில் தாங்கள் பெருமைப்படுவதாகக் கூறும் ஆயர்களின் அறிக்கை, நாட்டில் அமைதி காக்கப்படவும் கோரியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.