இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 650 பேர் கடத்தப்பட்டுள்ளனர்! சண்டே ரைம்ஸ்
ஜூலை09, 2012. இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை
அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு
ஏறத்தாழ 4 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இச்செய்தி மூலம் தெரிய வருகிறது. கடந்த வருடத்தில்
மட்டும் இலங்கையில் 15,000 பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய-பசிபிக் வலயம் தொடர்பான 2011ம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுடன் பாதுகாப்புத் தரப்பினர்
நேரடியாக தொடர்புபட்டிருக்கின்றனர் என அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமை தொடர்பான அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.