2012-07-07 15:43:33

Penang மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு செபஸ்தியான் பிரான்சிஸ்


ஜூலை07,2012. மலேசியாவின் Penang மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்திரு செபஸ்தியான் பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Penang மறைமாவட்டத்தின் ஆயராக இந்நாள்வரை பணியாற்றிய ஆயர் ஜோசப் அந்தோணி செல்வநாயகம் அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அம்மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயரை நியமித்துள்ளார்.
மலேசியாவின் Melaka-Johor மறைமாவட்டத்தின் குருகுல அதிபராக இந்நாள்வரைப் பணியாற்றி வந்தவர் Penang மறைமாவட்டத்தின் புதிய ஆயர் செபஸ்தியான் பிரான்சிஸ். மலேசியாவின் Johor Bahru வில் 1951ம் ஆண்டு பிறந்த இவர், 1977ம் ஆண்டு குருவானார்.
1955ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Penang மறைமாவட்டத்தில் வாழும் சுமார் 65 இலட்சம் மக்களில் 66 ஆயிரம் பேர் கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.