2012-07-07 15:45:01

Golan Heights பகுதியில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா.அமைதிகாப்புப் படைக்குத் தலைவராக இந்தியத் தளபதி நியமனம்


ஜூலை 07,2012. இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையேயான Golan Heights பகுதியில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் ஐ.நா.அமைதிகாப்புப் படைக்குத் தலைவராக இந்தியத் தளபதி Iqbal Singh Singhaவை நியமித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
வருகிற ஆகஸ்டில் இந்தப் பொறுப்பை ஏற்கும் தளபதி Iqbal Singh Singha, தேசிய மற்றும் சர்வதேச அளவில் அமைதிகாப்புப் பணிகளைத் திறம்படச் செய்திருப்பவர் என்று பான் கி மூன் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே 1973ம் ஆண்டில் போர் முடிந்த பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் ஐ.நா.பாதுகாப்பு அவை, UNDOF என்ற ஐ.நா.அமைதிகாப்பு அமைப்பை உருவாக்கியது.
இந்த அமைப்பு இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதிவரைப் பணியாற்றும் என்ற உடன்பாடு கடந்த வெள்ளியன்று ஏற்பட்டது.








All the contents on this site are copyrighted ©.