2012-07-07 15:45:31

Bosnia-Herzegovina ஆயர் பேரவைத் தலைவர் : 1995ம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தில் மாற்றம் தேவை


ஜூலை07,2012. பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய நான்கு ஆண்டு காலச் சண்டை முடிவுக்கு வரக் காரணமாக இருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் இடம்பெற்ற 1995ம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தில் மாற்றம் தேவை என்று Bosnia-Herzegovina ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
ஒன்றிணைந்த, இறையாண்மை பெற்ற, அமைதி நிறைந்த, சமயச் சார்பற்ற குடியரசாக Bosnia-Herzegovina மாறுவதற்கு, Dayton ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று Strasbourg லுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கூறினார் Banja Luka ஆயர் Franjo Komarica.
Dayton ஒப்பந்தம் சண்டையை நிறுத்தினாலும் சனநாயகத்தையும் அமைதியான ஒன்றிணைந்த வாழ்வையும் உருவாக்குவதற்கு உதவவில்லை என்று ஆயர் மேலும் கூறினார்.
ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிர்களைக் காவு கொண்ட நான்காண்டு காலச் சண்டை முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும் Bosnia-Herzegovina வில் ஒரு திருப்தியற்ற சமூக, பொருளாதார, சட்ட மற்றும் அரசியல் சூழலையே காண முடிகின்றது என்று தெரிவித்தார் ஆயர்.
2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, Bosnia-Herzegovina குடியரசின் சுமார் 40 இலட்சம் மக்களில் சுமார் 15 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், 45 விழுக்காட்டினர் முஸ்லீம்கள், 36 விழுக்காட்டினர் செர்பிய ஆர்த்தடாக்ஸ் சபையினர் மற்றும் ஒரு விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர்.









All the contents on this site are copyrighted ©.