அணுவை விட சிறிய 'கடவுள் துகள்' கண்டுபிடிப்பில் இந்தியர்களின்
பங்களிப்பு
ஜூலை,05,2012. ஸ்விட்சர்லாந்தில் உள்ள CERN எனப்படும் அணு ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும்
அறிவியலாளர்கள், அணுவை விட சிறிய புதிய துகள் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தப்
புதியத் துகளுக்கு 'கடவுள் துகள்' "God particle" என்ற பெயரும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அணுவைவிட மிகச் சிறியதான இந்தப் புதியத் துகள், இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை
அறிந்துகொள்ள உதவும் என்று சொல்லப்படுகிறது. இத்துகள் பற்றிய கண்டுபிடிப்பில் இந்தியர்களுக்கும்
தொடர்புகள் உண்டு என்று ஊடகங்கள் கூறுகின்றன. இந்த ஆய்வுக்கு இந்தியா ஒரு தந்தையைப் போல
இருந்துள்ளது என்று CERN சார்பில் பேசிய Paolo Giubellino கூறினார். இந்தப் புதியத்
துகள், தாங்கள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கும் Higgs Boson என்ற துகளின் தன்மையை
ஒத்திருப்பதாக CERN ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த Higgs Boson துகளின் பெயர் Peter
Higgs என்ற பிரித்தானிய ஆய்வாளரின் பெயரையும், Satyendranath Bose என்ற இந்திய ஆய்வாளரின்
பெயரையும் இணைத்து தரப்பட்ட பெயர். தற்போதைய இந்த ஆய்வில் கொல்கத்தா, மும்பை, அலகாபாத்,
புபனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள ஆய்வகங்களின் பங்களிப்பு இருந்ததென்று கூறப்படுகிறது.