2012-07-04 15:44:26

வத்திக்கானைப்பற்றி வெளியாகும் செய்திகள் நீதியற்ற முறையில் திருப்பீடச் செயலருக்குப் பிரச்சனைகளை உருவாக்கி வந்துள்ளன - திருத்தந்தை


ஜூலை,04,2012. திருஅவையை வழிநடத்துவதில் திருத்தந்தைக்குச் சிறப்பான ஆலோசனைகள் வழங்கி வந்துள்ள திருப்பீடச் செயலரின் பணிகளைப் பாராட்டி திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்களுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மைய மாதங்களில் வத்திக்கானைப்பற்றி வெளியாகும் பல்வேறு செய்திகள் நீதியற்ற முறையில் திருப்பீடச் செயலருக்குப் பிரச்சனைகளை உருவாக்கி வந்துள்ளதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் விடுமுறை இல்லத்திற்குச் செல்வதற்கு முன் கர்தினால் பெர்தோனே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் கர்தினால் பெர்தோனே அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் அவருக்குத் தன் முழு உறுதுணையும் உண்டு என்பதைக் கூறியத் திருத்தந்தை, அதே எண்ணங்களை மீண்டும் இக்கடிதத்தில் வெளிப்படுத்தி, திருப்பீடச் செயலருக்குத் தன் செபங்களையும் ஆசீரையும் இம்மடலின் மூலம் அனுப்பி வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.