2012-07-04 15:44:38

நமது உடலுக்கும், ஆன்மாவுக்கும் புத்துயிர் அளிக்கும் தருணமாக கோடை விடுமுறை அமையட்டும் - திருத்தந்தை


ஜூலை,04,2012. இயற்கையின் அழகு சூழ்ந்துள்ள கோடை விடுமுறை இல்லத்திற்கு நாம் வந்திருப்பது நமது உடலுக்கும், ஆன்மாவுக்கும் புத்துயிர் அளிக்கும் தருணமாக அமையட்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இச்செவ்வாயன்று வத்திக்கானிலிருந்து புறப்பட்டு, திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoவுக்குச் சென்ற திருத்தந்தை, தன்னுடன் அந்த இல்லத்திற்கு வந்திருந்த வத்திக்கான் அதிகாரிகளிடம் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை மக்களுக்கு வழங்கும் புதன் பொது மறைபோதகம் மற்றும் மூவேளை செப உரைகள் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறாது. ஆயினும், ஜூலை மாதத்தில் திருத்தந்தையைச் சந்திக்க வரும் குழுக்களையும், மற்ற தனி நபர்களையும் அவர் சந்திப்பார்.
ஜூலை மாதம் 11ம் தேதி, திருத்தந்தை பெனடிக்ட் அவர்களின் பாதுகாவலரான புனித பெனடிக்ட் திருநாளன்று, மேற்கு-கிழக்கு Divan இசைக் குழவைச் சேர்ந்த இளைய இசைக் கலைஞர்கள் திருத்தந்தைக்கு ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சியை Castel Gandolfoவில் நடத்த உள்ளனர்.
ஜூலை 15ம் தேதி, ஞாயிறன்று திருத்தந்தை Frascati என்ற மறைமாவட்டத்தில் தன் அப்போஸ்தலிக்கப் பயணத்தை மேற்கொண்டு, அங்குள்ள புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார்.








All the contents on this site are copyrighted ©.