2012-07-04 16:22:29

கவிதைக் கனவுகள் – இயேசுவே உமது பாதையை எனக்குக் காட்டும்


ஆண்டவரே! உமது வழிகளை எனக்குப் போதித்தருளும்.
பேதுரு உம்மை மறுதலித்த பின்னர்
நீர் அவரை நோக்கியது போல,
பணக்கார இளைஞரின் இதயத்தை, உமது சீடர்களின் இதயங்களை
நீர் ஊடுருவியது போல,
மக்களைப் பார்ப்பதற்கான உமது வழியை எனக்குக் கற்றுத்தாரும்.
நீர் சந்திக்கும் மக்களுக்கு ஏற்ப உமது சாயலும் மாறுவதால்
நீர் இருப்பது போலவே உம்மைச் சந்திக்க விரும்புகிறேன்.

உம்மோடு திருமுழுக்கு யோவான் நடத்திய முதல் சந்திப்பை....
நூற்றுவர் தலைவர் உம்முன் தகுதியற்றவராக உணர்ந்ததை...
நீர் செய்த புதுமைகளையும் வியப்புக்குரிய செயல்களையும் பார்த்து
மக்கள் மலைத்ததை....
ஒலிவத் தோப்பில் நீர் அடைந்த வேதனையில் உமது சீடர்களை,
பிலாத்துவை, அவரது மனைவியை
சிலுவையடியில் நூற்றுவர் தலைவரை....
நீர் வியப்பில் ஆழ்த்திய விதத்தை...
நினைத்துப் பார்க்கிறேன்.

கப்பர்நகூம் தொழுகைக்கூடத்தில்
நீர் நிகழ்த்திய உமது போதனையைக் கேட்ட மக்கள்
வியப்படைந்ததைப் போன்று,
உமது மலைப்பொழிவைக் கேட்டு
“நீர் அதிகாரம் உள்ளவர் போல் போதிப்பதாக”
மக்கள் உணர்ந்தது போன்று
நானும் நீர் பேசும் பாங்கைக் கேட்டு
கவரப்பட விரும்புகிறேன்.
எல்லாவற்றையும் புதிய கண்களால் காண, இயேசுவே,
எனக்கு அருள்வாயாக! (அருள்தந்தை பேதுரு அருட்பே சே.ச. அவர்களின் செபம் தமிழில்)








All the contents on this site are copyrighted ©.