2012-07-03 14:33:47

விசாகப்பட்டிணம் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Prakash Mallavarapu


ஜூலை03,2012. இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டிணம் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக ஆயர் Prakash Mallavarapu அவர்களை இச்செவ்வாயன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
விசாகப்பட்டிணம் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி பேராயர் Mariadas Kagithapu அவர்களின் பணி ஓய்வை, திருஅவை சட்ட எண் 401-1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அவ்வுயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, விஜயவாடா ஆயர் Prakash Mallavarapu அவர்களை நியமித்துள்ளார்.
ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் Jadi-Jamalpur என்ற ஊரில் 1949ம் ஆண்டு பிறந்த ஆயர் Prakash Mallavarapu, 1979ம் ஆண்டில் குருவாகி, 1998ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1886ம் ஆண்டில் மறைமாவட்டமாகவும், 2001ம் ஆண்டில் உயர்மறைமாவட்டமாகவும் உயர்த்தப்பட்ட விசாகப்பட்டிணத்தில் சுமார் 2 இலட்சத்து 47 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.