ஜூலை 3ம் தேதி மாலை Castel Gandolfoவுக்குச் செல்கிறார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்
ஜூலை,02,2012. பாப்பிறைகளின் கோடைவிடுமுறை இல்லம் அமைந்திருக்கும் Castel Gandolfoவுக்கு
ஜூலை 3, இச்செவ்வாய் மாலை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கோடை விடுமுறைக்காகச் செல்வார்
என்று வத்திக்கானிலுள்ள பாப்பிறை இல்லம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாள்களில்
அனைத்துத் தனிப்பட்ட சந்திப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும், புதன் பொது மறைபோதகம்
இந்த ஜூலை மாதத்தில் நடைபெறாது எனவும் இது மீண்டும் ஆகஸ்ட் ஒன்றாந்தேதி புதன்கிழமையிலிருந்து
Castel Gandolfo வில் இடம்பெறும் எனவும் அவ்வில்லம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. மேலும்,
இந்தக் கோடைவிடுமுறையில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் முக்கிய விழா நாள்களில் நண்பகல்
மூவேளை செப உரை Castel Gandolfoவில் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.