2012-07-02 15:14:21

இரஷ்ய விண்கலம் 193 நாட்களுக்கு பின்பு 3 வீரர்களுடன் தரையிறங்கியது


ஜூலை,02,2012. இரஷ்யாவின் Soyuz விண்கலம் 193 நாட்களுக்கு பின்பு 3 வீரர்களுடன் பாதுகாப்பாக கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் தரையிறங்கியது.
அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து அனைத்துலக விண்வெளி ஆய்வு கூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இரஷ்யாவின் Soyuz விண்கலத்தின் மூலம் இரஷ்யாவைச் சேர்ந்த Oleg Kononenko, NASA வில் பணிபுரியும் Donald Pettit, நெதர்லாந்தைச் சேர்ந்த Andre Kuipers ஆகிய 3 வீரர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டு சென்றனர்.
அங்கு இவர்கள் ஆய்வுக்கூடம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். 193 நாட்களுக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்ட இவர்களது Soyuz விண்கலம், இஞ்ஞாயிறன்று கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் தரையிறங்கியது.
சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் Joseph Acaba, Gennady Padalka, Sergei Revin ஆகிய 3 பேர் தங்கியுள்ளனர். அவர்கள் மூவரும் மூன்று மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து பணியாற்ற, நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இரஷ்ய வீரர் Yury Malenchenko, ஜப்பானிய வீரர் Aki Hoshide ஆகிய 3 பேரும் Soyuz விண்கலம் மூலம் விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.