2012-06-30 15:42:30

பத்மாவதி நதியில் 300 கோடி டாலர் செலவில் பாலம் கட்டுவதற்கு மலேசியா தயார்


ஜூன்30,2012. பங்களாதேஷில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு உதவியாக, பத்மாவதி நதியில் 300 கோடி டாலர் செலவில் பாலம் கட்டுவதற்கு நிதி உதவி செய்வதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது மலேசியா.
6.15 கிலோ மீட்டர் நீளமுடைய பாலம் கட்டுவது குறித்த பரிந்துரையை மலேசியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி எஸ்.சாமிவேலு, பங்களாதேஷ் ஊடகத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்தப் பாலத்தை பங்களாதேஷிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் 37 ஆண்டுகளுக்கு மலேசியா பயன்படுத்தும் என்றும் அந்தப் பரிந்துரையில் குறிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பத்மாவதி நதியில் பாலம் கட்டும் திட்டம் பங்களாதேஷின் சுமார் 3 கோடி ஏழை மக்கள் முன்னேறுவதற்கு உதவும் என்று உலக வங்கி கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.