13வது உலக ஆயர்கள் மாமன்றத் தலைவர் பிரதிநிதிகள் நியமனம்
ஜூன்30,2012. வருகிற அக்டோபரில் தொடங்கும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைவர் பிரதிநிதிகளை
இச்சனிக்கிழமை நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். வருகிற அக்டோபர் 7 முதல் 28
வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைவர் பிரதிநிதிகளாக,
Hong Kong ஆயர் கர்தினால் John Tong Hon, மெக்சிகோவின் Guadalajara பேராயர் கர்தினால்
Francisco Robles Ortega, காங்கோ குடியரசின் Kinshasa பேராயர் கர்தினால் Laurent Monsengwo
Pasinya ஆகியோரை நியமித்துள்ளார் திருத்தந்தை. இந்த உலக ஆயர்கள் மாமன்றம், "கிறிஸ்தவ
விசுவாசத்தைப் பரப்புவதற்கானப் புதிய நற்செய்திப்பணி" என்ற தலைப்பில் நடைபெறும். இதில்
உலகெங்கிலுமிருந்து சுமார் 300 ஆயர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.