உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு செயல்திட்டம் தேவை – ஐ.நா.
ஜூன்29,2012. உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாடுகள் ஆர்வம் காட்டினாலும்,
உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்தத் தழும்பை அழிப்பதற்குச் செயல்திட்டங்கள் அவசியம் என்று
ஐ.நா.பொது அவைத் தலைவர் Nassir Abdulaziz Al-Nasser கூறினார். அரசியல்ரீதியாகக் காட்டப்படும்
ஆர்வத்தின் வழியாக மட்டுமே பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி உலகைப்
பயங்கரவாதம் இல்லாத இடமாக அமைக்க முடியும் என்றும் Al-Nasser கூறினார். பயங்கரவாதத்தை
ஒழிப்பது குறித்து 2006ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.பொது அவை ஏற்றுக் கொண்ட யுக்திகள்
குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றிய Al-Nasser
இவ்வாறு கூறினார்.