2012-06-28 15:38:21

மதமாற்றத் தடைச்சட்டம் மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முயற்சிகளுக்குக் கண்டனம்


ஜூன்,28,2012. மதமாற்றத் தடைச்சட்டம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு அனைத்திந்திய கிறிஸ்தவக் கழகம் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அடிப்படைவாத இந்துக்கள் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் செய்துவரும் அராஜகத்தைப் போல், மணிப்பூர் மாநிலத்திலும் நடைபெறுவதை எங்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று இக்கழகத்தின் மாநிலச் செயலர் Madhu Chandra, செய்தியாளர்களிடம் கூறினார்.
மதமாற்றத் தடைச்சட்டம் தற்போது மத்தியப்பிரதேசம், ஒடிஸ்ஸா, அருணாச்சலப்பிரதேசம், குஜராத், ஹிமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
ஒடிஸ்ஸா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த சட்டத்தைச் சுட்டிக்காட்டி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்துள்ளன என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மதமாற்றத் தடைச்சட்டம் குடிமக்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரான ஒரு சட்டம் என்று இந்தியாவிலும், பல நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளன என்று Madhu Chandra கூறினார்.








All the contents on this site are copyrighted ©.