2012-06-26 16:49:40

ஜூன் 26 - போதைப்பொருள் ஒழிப்பு தினம்


ஜூன்,26,2012. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 26ம் தேதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப்பொருள், அதை பயன்படுத்துபவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமுதாயத்தையும் பாதிக்கிறது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் தான். உலகில் இலட்சக்கணக்கானோர் இதற்கு அடிமையாக மாறியிருப்பது கவலைக்குரியது.
உலக வர்த்தகத்தில் பெட்ரோல் மற்றும் இராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது.
போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் போதைபொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இறப்போரின் எண்ணிக்கை 2,50,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளையோர் என்பது வேதைனையான ஓர் உண்மை.








All the contents on this site are copyrighted ©.