2012-06-26 16:39:16

கவிதைக் கனவுகள் - நிதான விதைகள்


கவிதைச் சாலை என்ற வலைதளத்தில் Xavier Dasaian என்பவர் எழுதியக் கவிதையின் சில வரிகள்:

அழுத்தங்களின்
வயல் வெளிகளில்
நீ
முளைப்பிப்பவற்றை வைத்தே
உன்
உண்மை முகம்
எழுதப்படும்.

திறமை என்பது
தவறும் சூழல்
தவறாமல் தொடரும்போது
தவறாமல் இருப்பது,

மழையே விழாத
மலைகளின் இடுக்கிலும்
முளைக்க முடியுமானால்
உன் விழிகளில்
பெருமை வடியலாம்.

முடியும் என்னும்
நம்பிக்கை முனைகளை
உள்ளுக்குள்
முடிந்து வை.

அத்தனை அம்புகள்
சீறி வந்தாலும்,
சிரித்தே அவற்றை
சேகரித்து வை.








All the contents on this site are copyrighted ©.