2012-06-23 15:43:00

இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்


ஜூன்23,2012. இந்திய இளையோரின் இறப்புக்களுக்கு இரண்டாவது காரணமாக இருப்பது தற்கொலை எனவும், உலகில் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும் Lancet மருத்துவ இதழ் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 60 விழுக்காட்டினர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வசதிகளில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் 2010ம் ஆண்டில் 1,90,000 தற்கொலைகள் இடம்பெற்றன என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
உலக அளவில் ஆண்டுக்கு 9 இலட்சம் தற்கொலைகள் நடக்கின்றன, இவற்றில் சீனாவில் இரண்டு இலட்சம் என அந்நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.