2012-06-22 16:44:00

வட கொரியாவில் கடும் உணவு நெருக்கடி, ஐ.நா.எச்சரிக்கை


ஜூன்22,2012. வட கொரியா கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வாண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கடும் நெருக்கடியை எதிர்நோக்கக்கூடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த வறட்சியால் அந்நாட்டின் 90 விழுக்காட்டுச் சாகுபடி நிலங்கள் கடுமையாய்ப் பாதிக்கக்கூடும் என்றும், 30 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கடும் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குவார்கள் என்றும் அந்நிறுவனம் கூறியது.
பன்னாட்டு மனிதாபிமானக் குழுக்களும், உதவி செய்யும் நிறுவனங்களும் வட கொரியாவின் உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு உதவுமாறும் ஐ.நா. நிறுவனம் கேட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.