திருத்தந்தை லாத்வியா நாட்டின் பிரதமருடன் சந்திப்பு
ஜூன்,21,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லாத்வியா நாட்டின் பிரதமர் Valdis Dombrovskisஐ
இப்புதன் பொதுமறைபோதகத்திற்குப் பின் சந்தித்தார். வத்திக்கானுக்கும், லாத்வியாவுக்கும்
இடையே நிலவும் நல்லுறவைக் குறித்தும், கத்தோலிக்கத் திருஅவை லாத்வியா நாட்டில் மேற்கொண்டுவரும்
நற்பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டன. இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளக்கூடிய
செயல்பாடுகள் பற்றியும், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்தும்
இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன. இச்சந்திப்பிற்குப் பின், லாத்வியா பிரதமர்
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அவர்களையும் பன்னாட்டு உறவுகளின்
திருப்பீடச் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்துப் பேசினார்.