2012-06-20 16:28:31

நைஜீரியாவின் Kaduna பகுதியில் அமைதி மீண்டும் திரும்பியுள்ளது - பேராயர்


ஜூன்,20,2012 நைஜீரியாவின் Kaduna பகுதியில் அமைதி மீண்டும் திரும்பியுள்ளது என்று Kaduna பேராயர் Matthew Man-oso Ndagoso கூறினார்.
ஜூன் 17 இஞ்ஞாயிறன்று கிறிஸ்து அரசர் பேராயலாம் உட்பட இரு கிறிஸ்துவ கோவில்கள் வெடி குண்டு தாக்குதல்களுக்கு உள்ளானது. இத்துடன் நைஜீரியாவில் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் பல இடங்களில் வன்முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை திருத்தந்தை இப்புதனன்று வழங்கிய மறைபோதகத்தின்போது குறிப்பிட்டார்.
இஞ்ஞாயிறு நிகழ்ந்த குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் விளைவாக 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று பேராயர் Ndagoso எடுத்துரைத்தார்.
இச்செவ்வாய் முதல் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பேராயர் மேலும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.