2012-06-20 16:28:01

கத்தோலிக்கத் திருஅவை நாடோடி மக்களின் நலனில் அக்கறை காட்டிவருகிறது


ஜூன்,20,2012 கத்தோலிக்கத் திருஅவை Roma என்று அழைக்கப்படும் நாடோடி மக்களின் நலனில் அக்கறை காட்டிவருகிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
"கதவுகளைத் திறக்க" (“Opening Doors”) என்ற மையக்கருத்துடன் ஹங்கரி நாட்டின் Eger எனுமிடத்தில் இச்செவ்வாய் முதல் வியாழன் முடிய நடைபெற்றுவரும் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீடப் பயணிகள் நல அவையின் இணைச் செயலர் அருள்தந்தை Gabriel Bentoglio இவ்வாறு கூறினார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயேசுசபை அருள்தந்தை Jean Fleury அவர்களின் முயற்சியால் 1948ம் ஆண்டு Roma நாடோடி மக்களுக்கு ஆன்மீகப் பணிகள் துவக்கப்பட்டன என்று அருள்தந்தை Bentoglio தன் உரையில் நினைவு கூர்ந்தார்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, திருஅவை இம்மக்களுக்கு ஆற்றிய பல்வேறு பணிகளையும் எடுத்துக் கூறிய அருள்தந்தை Bentoglio, 1988ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் திருப்பீட பயணிகள் நல அவையை உருவாக்கியதன் மூலம் திருஅவை இம்மக்களுக்கு காட்டிவரும் தனிப்பட்ட அக்கறையை நாம் உணரலாம் என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.