2012-06-19 16:43:34

வடநைஜீரியாவின் கிறிஸ்து அரசர் பேராலயத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு


ஜூன்,19,2012. நான் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த நேரத்தில் அக்கோவிலை நோக்கி வந்த வெடிகுண்டுகள் நிறைந்த வாகனம் தடுக்கப்பட்டதால், வாகனம் கோவிலுக்கு வெளியிலேயே வெடித்தது என்று நைஜீரியாவின் ஆயர் ஒருவர் கூறினார்.
வடநைஜீரியாவின் Kaduna மாநிலத்தில், கிறிஸ்து அரசர் பேராலயத்தில் Zaria மறைமாவட்ட ஆயர் George Jonathan Dodo, இஞ்ஞாயிறன்று திருப்பலி ஆற்றிக்கொண்டிருந்த வேளையில், கோவிலுக்கு வெளியே வாகனம் ஒன்று வெடித்தது. மற்றொரு கிறிஸ்தவக் கோவிலும் தாக்குதலுக்கு உள்ளானது.
இத்தாக்குதலில் இருந்து தப்பித்த ஆயர் Jonathan Dodo, தான் அரசுடன் தொடர்பு கொண்டு, கிறிஸ்துவர்களின் பாதுகாப்பு குறித்து பேசி வருவதாக Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இத்தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பகுதியில் கிறிஸ்துவ இளையோர்க்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகியுள்ளன என்று BBC செய்தியொன்று கூறியது.








All the contents on this site are copyrighted ©.