திருப்பீட அதிகாரி - நிரந்தர அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவது சாத்தியம்
ஜூன்,18,2012. நிரந்தர அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவது சாத்தியம், இருப்பினும்,
அந்த உலகைக் கட்ட ஒவ்வொருவரும் தங்கள் முயற்சியை வழங்கவேண்டும் என்று திருப்பீட அதிகாரி
ஒருவர் கூறினார். இத்திங்கள் முடிய Sloveniaவில் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் அவையின்
தலைவர் கர்தினால் Angelo Sodano, Slovenia நாட்டில் முதல் உலகப் போரால் பாதிக்கப்பட்டப்
பகுதிகளைப் பார்வையிட்டபின், இஞ்ஞாயிறன்று Nova Gorica பேராலயத்தில் ஆற்றியத் திருப்பலியில்
இவ்வாறு கூறினார். 1996 மற்றும் 1999 ஆகிய ஈராண்டுகள் Sloveniaவுக்குப் பயணங்கள் மேற்கொண்ட
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், அச்சத்தை வென்று, நம்பிக்கையை வளர்க்க உறுதியான அன்பால்
மட்டுமே முடியும் என்று இளையோருக்குக் கூறியதை மீண்டும் நினைவு கூர்ந்த கர்தினால் Sodano,
அமைதி நிறைந்த எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவோம் என்று கூறினார்.