2012-06-18 15:18:19

கத்தோலிக்கத் தகவல் பரிமாற்ற அரங்கத்தின் ஒன்பதாவது கருத்தரங்கிற்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


ஜூன்,18,2012. சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதலும், அவற்றைக் குறித்த சரியான தகவல் பரிமாற்றம் செய்தலும் இன்றியமையாதது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறன்று இத்தாலியின் Trent நகரில் நிறைவுற்ற கத்தோலிக்கத் தகவல் பரிமாற்ற அரங்கத்தின் ஒன்பதாவது கருத்தரங்கிற்கு ஒரு தந்தியின் மூலம் வாழ்த்துக்களை அனுப்பியத் திருத்தந்தை, உண்மையானத் தகவல்கள் மக்களைச் சென்றடைவதன் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
திருத்தந்தையின் இந்தத் தந்திச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே Trent உயர்மறைமாவட்டப் பேராயர் Luigi Bressan அவர்களுக்கு அனுப்பிவைத்தார்.








All the contents on this site are copyrighted ©.