முதியோர் துன்புறுத்தப்படுவது குறித்த முதல் உலக விழிப்புணர்வு நாள் (ஜூன்15)
ஜூன்16,2012. உலகில் வாழும் வயதானோரில் 4 முதல் 6 விழுக்காட்டினர் ஏதாவது ஒருவகையில்
துன்புறுத்தப்படுகின்றனர் என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார். முதியோர்
துன்புறுத்தப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐநா.வால் இவ்வெள்ளியன்று
கடைப்பிடிக்கப்பட்ட முதல் உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன், உடல், உணர்வு,
பணம் என முதியோர் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். முதியோரின்
மனித மாண்பு மற்றும் மனித உரிமைகளைத் தாக்கும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை
என்று கூறும் அவரின் செய்தி, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கங்களாக முதியோர் மதிக்கப்படுமாறு
வலியுறுத்தியுள்ளார்.