அருட்பணியாளர்கள் இன்றி திருஅவை இருக்க முடியாது- கர்தினால் பியாச்சென்சா
ஜூன்16,2012. அருட்பணியாளர்கள் இன்றி திருஅவை இருக்க முடியாது என்று அருட்பணியாளர்களின்
தூய வாழ்வுக்காகச் செபிக்கும் உலக நாளையொட்டிக் கூறினார் குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால்
மவ்ரோ பியாச்சென்சா. இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இவ்வுலக நாளையொட்டி “Avvenire”
என்ற இத்தாலிய தினத்தாளுக்குப் பேட்டியளித்த கர்தினால் பியாச்சென்சா, திருஅவைக்கும் உலகுக்கும்
புனிதக் குருக்கள் தேவைப்படுகின்றார்கள் என்று கூறினார். திருத்தந்தை 16ம் பெனடிக்டும்,
அவர் பாப்பிறைப் பணியைத் தொடங்கியதிலிருந்து விடாமல் இவ்வாறு கூறி வருகிறார் என்றும்
உரைத்த கர்தினால் பியாச்சென்சா, புனித ஜான் மரிய வியானியை குருக்கள் எப்போதும் தங்களது
எடுத்துக்காட்டாய்க் கொண்டு அவரைப் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக் கொண்டார். இயேசுவின்
திருஇதய விழாவன்று அருட்பணியாளர்களின் தூய வாழ்வுக்காகச் செபிக்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.