2012-06-14 16:55:31

திருப்பீடக் கலாச்சார அவை நடத்தும் கருத்தரங்கு ஜூன் 29ம் தேதி இத்தாலியத் தூதரகத்தில் நடைபெறும்


ஜூன்,14,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழங்கிய தூண்டுதலால், ‘புறவினத்தார் முற்றம்’ என்ற பெயரில் திருப்பீடக் கலாச்சார அவை நடத்திவரும் கருத்தரங்கு இம்மாதம் 29ம் தேதி உரோம் நகரில் உள்ள இத்தாலியத் தூதரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத நம்பிக்கை உள்ளவர்களும், மத நம்பிக்கை அற்றவரும் இணைந்து மேற்கொள்ளும் உரையாடல் முயற்சிகளின் அமைப்பாகச் செயல்படும் 'புறவினத்தார் முற்றம்' கருத்தரங்கில் திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi மற்றும், திருப்பீடப் பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran ஆகியோர் துவக்க அமர்வில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'அரசியல் உறவும், உண்மையும்' என்ற மையக்கருத்துடன் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில், வத்திக்கானில் பணியாற்றும் பல்வேறு நாட்டுத் தூதர்களும் கலந்துகொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.