மருத்துவத் துறையை இன்னும் அதிகமாக மனிதமயமாக்க வேண்டும் - திருப்பீட அதிகாரி
ஜூன்,13,2012. மருத்துவத் துறையை இன்னும் அதிகமாக மனிதமயமாக்க வேண்டும் என்று திருப்பீட
அதிகாரி ஒருவர் கூறினார். "புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் புதிய முறைகளும் வாய்ப்புக்களும்"
என்று தலைப்பில் இத்திங்களன்று உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நலத்துறையில்
ஆன்மீகப் பணிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் செயலர் பேராயர் Jean-Marie
Mupendawatu, இவ்வாறு கூறினார். நோயுற்றோருக்குத் தகுந்த பராமரிப்பு தேவை என்பதை உணர்ந்த
திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான் பால், இத்திருப்பீட அவையை உருவாக்கினார் என்பதை பேராயர்
Mupendawatu, எடுத்துரைத்தார். உலகில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் மருத்துவ முறைகள்
நோயைக் கட்டுப்படுத்துவதிலும், நோயைக் குணமாக்குவதிலும் அதிக கவனம் செலுத்து வருகிறது
என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Mupendawatu, நோயைக் காட்டிலும் நோயுற்றோர் மீது இன்னும்
அதிகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.