பாகிஸ்தான் விமானப் படை உயர் அதிகாரி Cecil Chaudhryஅவரது மரணத்தின்
இரண்டாம் மாத நினைவு
ஜூன்,13,2012. ஏப்ரல் மாதம் 13ம் தேதி இறையடி சேர்ந்த பாகிஸ்தான் விமானப் படையின் உயர்
அதிகாரி Cecil Chaudhry அவரது மரணத்தின் இரண்டாம் மாத நினைவு லாகூரில் கடைபிடிக்கப்பட்டது. கராச்சி
பேராயர் Joseph Coutts தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டுத் திருப்பலியில் ஆயர்கள், குருக்கள்,
துறவியர், பொதுநிலையினர் பலரும் கலந்து கொண்டனர். 'ஒரே நாடு, ஒரே மக்கள்' என்ற கருத்துடன்
கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியரையும் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க
இராணுவ வீரர் Chaudhry, பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்
என்று கரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Bonnie Mendes கூறினார். பாகிஸ்தானில்
அடிப்படைவாத இஸ்லாமியக் குழுவினரால் கொல்லப்பட்ட அமைச்சர் Shahbaz Bhatti உருவாக்கிய
அனைத்து பாகிஸ்தான் சிறுபான்மையினர் இயக்கம் என்ற அமைப்பில் அமைச்சருடன் இணைந்து பணி
புரிந்த Cecil Chaudhry, மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்காகவும் பணிகள் பல புரிந்தார்
என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.